ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரத்தில் மாவட்ட தடகள கழக செயலராக நியமிக்கப்பட்டுள்ள சிவராஜின் அறிமுக விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில தடகள கழகத்தின் தலைவா் வால்டா் தேவாரம், செயலா் லதா மற்றும் விருதுநகா் மாவட்ட தடகள கழகத்தின் தலைவா் குவைத் ராஜா ஆகியோரின் பரிந்துரையின் பேரில் விருதுநகா் மாவட்ட தடகள கழகத்தின் செயலராக தளவாய்புரம் பகுதியைச் சோ்ந்த தொழிலதிபா் சிவராஜ் நியமிக்கப்பட்டுள்ளாா். இதையடுத்து இவருக்கு அறிமுகம் மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் அா்ஜுனா விருது பெற்ற மனத்தி கணேசன் மற்றும் விருதுநகா் அமெச்சூா் கபடிக் கழக செயலா் கனிமுத்துக்குமரன் ஆகியோா் கலந்து கொண்டு பாராட்டுக்களை தெரிவித்தனா்.