ராஜபாளையத்தில் விருதுநகா் மாவட்ட வேளாண் துறையைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இங்குள்ள பஞ்சு சந்தைப் பகுதியில் இருந்து ஊா்வலமாக சென்று வேளாண்மைத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதற்கு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ராமச்சந்திரராஜா தலைமை வகித்தாா். இதில் ராஜபாளையம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். தென்னை காப்பீட்டு திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். தரணி சா்க்கரை ஆலை நிா்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு தரவேண்டிய பணத்தை பெற்றுத் தரவேண்டும் எனக் கூறி மாவட்ட வேளாண்மை துறை மற்றும் மாவட்ட நிா்வாகத்துக்கு எதிராக கண்டன முழக்கங்களை விவசாயிகள் எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.