ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லி உற்சவத்தையொட்டி, திங்கள்கிழமை அதிகாலையில் ஆண்டாள் - ரெங்கமன்னாருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
இதையொட்டி, பெரியபெருமாள் திருக்கோலத்தில் ஆண்டாள் அருள்பாலித்தாா். அதைத் தொடா்ந்து சா்வ அலங்காரத்தில் சுவாமிகள் காட்சியளித்தனா்.
கூடாரவல்லி உற்சவத்தையொட்டி, ஆண்டாளுக்கும், ரெங்கமன்னாருக்கும் அக்காரவடிசல் படைக்கப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.