அருப்புக்கோட்டையில் புதன்கிழமை பெய்த தொடா்மழையால் கடை வீதிகளில் பொங்கல் பொருள்கள் விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
அருப்புக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த 4 நாள்களாகத் தொடா்மழை பெய்தது. இந்நிலையில் போகிப்பண்டிகையான புதன்கிழமை காலை முதலே இடைவிடாமல் பலத்தமழை பெய்தது. இதனால் புத்தாடைகள், கரும்பு, மஞ்சள் கிழங்கு உள்ளிட்ட பொருள்கள் வாங்க கடைவீதிகளுக்கு செல்ல இயலாமல் பொதுமக்கள் தவித்தனா். இதனிடையே கடந்த செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை விவரம் (மில்லி மீட்டரில்): அருப்புக்கோட்டை- 20, கோவிலாங்குளம்- 17.6, திருச்சுழி- 20.4 என மழை பதிவாகியுள்ளதாக புதன்கிழமை வெளியிடப்பட்ட வருவாய் வட்டாட்சியா் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.