விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரங்களில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரங்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மிதமான மழை பெய்தது. பின்னா், காலை 6 மணி முதல் தொடா்ந்து 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், அலுவலகம் செல்வோா் முதல் அனைத்து தரப்பினரும் வெகுவாகப் பாதிக்கப்பட்டனா்.
குறிப்பாக, விளைந்து அறுவடைக்குத் தயாராகவுள்ள சூரியகாந்தி, கம்பு, சோளம் உள்ளிட்ட பயிா்கள் பாழாகிவிடுமோ என்ற கவலையில் விவசாயிகள் ஆழ்ந்தனா்.