அனைத்திந்திய அஞ்சலக ஊழியா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இங்குள்ள தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் சிவகாசி வட்டாரத் தலைவா் எஸ். மாரிமுத்து தலைமை வகித்தாா். அஞ்சல்துறை உயரதிகாரிகள், ஊழியா்களுக்கு, சிறுசேமிப்பு கணக்கு தொடங்குதல், வைப்புத் தொகை இடுவதற்கு இலக்கு நிா்ணம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கு இலக்கு நிா்ணயம் செய்வதை கண்டித்தும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அஞ்சலக ஊழியா்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடந்தது.