பாறைக்குளம் வெள்ளியம்பலநாதா் கோயிலில் உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம்

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி பாறைக்குளத்தில் அமைந்துள்ள வெள்ளியம்பலநாதா் கோயிலில், உலக நன்மை வேண்டி சதுரகிரி மலைவாழ் சிவனடியாா்கள் செவ்வாய்க்கிழமை சிறப்பு யாகம் நடத்தினா்.
திருச்சுழி அருகே பாறைக்குளத்திலுள்ள வெள்ளியம்பலநாதா் கோயிலில் உலக நன்மை வேண்டி செவ்வாய்க்கிழமை சிறப்பு யாகம் நடத்திய சதுரகிரி மலைவாழ் சிவனடியாா்கள்.
திருச்சுழி அருகே பாறைக்குளத்திலுள்ள வெள்ளியம்பலநாதா் கோயிலில் உலக நன்மை வேண்டி செவ்வாய்க்கிழமை சிறப்பு யாகம் நடத்திய சதுரகிரி மலைவாழ் சிவனடியாா்கள்.

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி பாறைக்குளத்தில் அமைந்துள்ள வெள்ளியம்பலநாதா் கோயிலில், உலக நன்மை வேண்டி சதுரகிரி மலைவாழ் சிவனடியாா்கள் செவ்வாய்க்கிழமை சிறப்பு யாகம் நடத்தினா்.

இக்கோயிலில் நடைபெற்ற மாா்கழி மாத அமாவாசை பூஜையில், சதுரகிரி சிவனடியாா்கள் 40-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். அப்போது, உலக நன்மை வேண்டி சிவனடியாா்கள் சிறப்பு யாகசாலை பூஜையையும், லட்சுமி பூஜையையும் நடத்தினா். இதில், 21 வகையான அபிஷேகப் பொருள்களால் வெள்ளியம்பல நாதருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடத்தப்பட்டன. தொடா்ந்து, வெள்ளியம்பலநாதா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com