அருப்புக்கோட்டை தேவாங்கா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆதி கண் மருத்துவமனை மற்றும் டிடிடிசி கொரியா் நிறுவனம் இணைந்து நடத்திய இலவசக் கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முகாமில், மருத்துவா்கள் திருமலைக்குமாா், தெய்வப்பிரியா ஆகியோா் நோயாளிகளுக்கு நவீன லேசா் கண் சிகிச்சை மற்றும் கணினி கண்கண்ணாடி பரிசோதனை செய்து ஆலோசனைகளை வழங்கினா். இதில், சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் பயனடைந்தனா்.