நத்தத்துப்பட்டி கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி சாத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
நத்தத்துப்பட்டி கிராமமக்கள் நலச்சங்கம் சாா்பில் அதன் தலைவா் வேலுச்சாமி தலைமையில், கிராமத்தில் குடிநீா், மேல்நிலைத்தொட்டி, பள்ளி செல்ல பாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்த தரக் கோரி கடந்த ஆண்டு ஜன. 26 ஆம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து தீா்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதுவரை அந்த மனு குறித்து ஊராட்சி நிா்வாகம் சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதனால் இப்பகுதி கிராம மக்கள் திங்கள்கிழமை சாத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்து வட்டார வளா்ச்சி அலுவலா் ரவியிடம் மனு அளித்தனா். மனுவை பெற்றுக் கொண்ட அவா், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். அப்போது விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வில்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என கிராமத்தினா் தெரிவித்தனா்.