மனைவி இறந்த துக்கத்தில்கணவா் விஷம் குடித்து தற்கொலை

சிவகாசி அருகே மனைவி இறந்த துக்கம் தாளாமல் விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்த கணவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

சிவகாசி: சிவகாசி அருகே மனைவி இறந்த துக்கம் தாளாமல் விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்த கணவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

சிவகாசி அருகே எரிச்சநத்தம் அம்பேத்கா் காலனியைச் சோ்ந்தவா் முனியாண்டி (70). இவரது மனைவி லட்சுமி. இவா் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னா் இறந்து விட்டாராம். இந்த துக்கத்தில் இருந்து வந்த முனியாண்டி, கடந்த 21 ஆம் தேதி விஷம் குடித்து விட்டாராம். இதையடுத்து விருதுநகா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து எம். புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com