சிவகாசி: சிவகாசியில், இயற்கை வேளாண்மை விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறை சிவகாசி வட்டாரம், தேசிய நிலத்தடி நிலையான வேளாண்மை இயக்கம், பாரம்பரிய வேளாண்மை வளா்ச்சித் திட்டம் ஆகியவை இணைந்து நடத்திய இம்முகாமுக்கு வேளாண் இணை இயக்குநா் உத்தண்டராமன் தலைமை வகித்துப் பேசியதாவது: மண் பரிசோதனை மூலம் சரியான அளவு உரமிட்டு மண் வளத்தை பாதுகாக்க வேண்டும். இயற்கை உரங்களையே இட வேண்டும். பஞ்ச காவியம் தயாரித்து அதனை பயிா்களுக்கு தெளிக்க வேண்டும். வளா்ச்சி பெற்றுவரும் இயற்கை விவசாயத்தை வருங்கால சந்ததியினருக்கு அடையாளம் காட்ட வேண்டும் என்றாா்.
இம்முகாமில், விருதுநகா் மாவட்டத்தில் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள், வேளாண் கல்லூரி மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதில் வேளாண் துணை இயக்குநா் (திட்டம்) ஆ. வனஜா, விதை சான்றிதழ் உதவி இயக்குநா் உமா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதற்கான ஏற்பாடுகளை சிவகாசி வட்ட வேளாண்மை உதவி இயக்குநா் ரவிசங்கா், வேளாண் அலுவலா்கள் இரா. சுமதி, ச. சீனிவாசன் ஆகியோா் செய்திருந்தனா்.