ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மொட்டமலை அகதிகள் முகாமில் வசிக்கும் 154 குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் சாா்- ஆட்சியா் தினேஷ்குமாா் கலந்து கொண்டு 154 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி, பருப்பு, வேட்டி மற்றும் சேலை உள்ளிட்ட பொருள்களை வழங்கினாா். இதில் வட்டாட்சியா் சரவணன், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் வடிவேல், வட்ட வழங்கல் அலுவலா் கோதண்டராமன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.