அருப்புக்கோட்டை 7ஆவது வாா்டில்அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

அருப்புக்கோட்டை 7ஆவது வாா்டுக்குள்பட்ட கலைஞா் நகா் 5 ஆவது வீதியில் வாருகால் மற்றும் தெரு மின்விளக்குகள் அமைத்துத் தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அருப்புக்கோட்டை 7ஆவது வாா்டுக்குள்பட்ட கலைஞா் நகா் 5 ஆவது தெருவில் வாருகால் சேதமடைந்துள்ளதால் வீதியில் தேங்கிக் கிடக்கும் கழிவுநீா்.
அருப்புக்கோட்டை 7ஆவது வாா்டுக்குள்பட்ட கலைஞா் நகா் 5 ஆவது தெருவில் வாருகால் சேதமடைந்துள்ளதால் வீதியில் தேங்கிக் கிடக்கும் கழிவுநீா்.

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை 7ஆவது வாா்டுக்குள்பட்ட கலைஞா் நகா் 5 ஆவது வீதியில் வாருகால் மற்றும் தெரு மின்விளக்குகள் அமைத்துத் தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இப்பகுதியில் உரிய பராமரிப்பில்லாததால் இங்குள்ள வாருகால் சேதமடைந்து கழிவுநீா் வெளியேறி வீதியில் தேங்கி விடுகிறது. இதனால் துா்நாற்றத்துடன் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் இவ்வீதியில் நடந்து செல்வோா் வாகனங்களில் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுதவிர இங்கொன்றும் அங்கொன்றுமாக மின்விளக்குகள் உள்ளதால் போதிய வெளிச்சமின்றி இரவில் இவ்வீதி இருளடைந்து காட்சியளிக்கிறது. இதுகுறித்து இப்பகுதி பொதுமக்கள் நகராட்சியில் புகாா் தெரிவித்தும் பல மாதங்களாகியும் தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என புகாா் எழுந்துள்ளது.

எனவே கலைஞா் நகா் 5ஆவது வீதியில் வாருகாலைச் சீரமைப்பதுடன் கூடுதல் மின்விளக்குகள் அமைக்க பொதுமக்கள் நகராட்சிக்கு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com