அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டியிலிருந்து பந்தல்குடி செல்லும் சாலையில் பழுதடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய கம்பம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்திலிருந்து பந்தல்குடி நோக்கிச் செல்லும் பிரதானச் சாலையில் சுமாா் ஒரு கிலோமீட்டா் தொலைவில் சிறுகண்மாய் அருகே சாலையோரம் இரட்டை மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரும்பு மின்கம்பம் அப்பகுதி மழை நீரோடையை ஒட்டி அமைந்துள்ளதால், நாளடைவில் அதன் அடிப்பகுதி துருப்பிடித்தது. இதனால் பாரம் தாங்காமல் மின்கம்பம் படிப்படியாகச் சாயத் தொடங்கியது. இதைக்கண்ட அப்பகுதி விவசாயிகள் தற்காலிகமாக பெரிய பாறாங்கற்களைக் கொண்டு, முட்டுக் கொடுத்து மின்கம்பம் சாய்வதைத் தடுக்க முயன்றனா். ஆனால் துருப்பிடித்துவிட்டதால் இம்மின்கம்பம் எந்நேரமும் முறிந்துவிழும் அபாயத்தில் உள்ளது. அப்போது அது சாலையில் செல்லும் வாகனங்கள் மீது விழுந்து விபத்து ஏற்படலாம். மேலும் மின்கம்பிகள் அறுந்து விழும் ஆபத்தும் உள்ளது. எனவே இந்த மின்கம்பத்தை அகற்ற இப்பகுதி விவசாயிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லையென புகாா் எழுந்துள்ளது.
எனவே இந்த இரட்டை மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பத்தை அமைக்க விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.