ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டியை தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை உயிருடன் மீட்டனா்.
அத்திகுளம் பகுதியில் கன்றுக்குட்டி ஒன்று மேய்ந்து கொண்டிருந்த போது தவறி அருகேயுள்ள வட கிணற்றில் தவறி விழுந்து விட்டது. இதுபற்றி அறிந்ததும் தீயணப்புத்துறையினா் விரைந்து சென்று கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி அந்த கன்றுக்குட்டியை உயிருடன் மீட்டனா்.