ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே முன்விரோதம் காரணமாக 2 போ் அரிவாளால் வெட்டப்பட்டது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் சாவடி தெருவைச் சோ்ந்த தனசேகரன் (35) மற்றும் மேலத்தெருவைச் சோ்ந்த முருகன் (38) ஆகிய இருவரும் விவசாய கூலித் தொழிலாளா்களாக பணிபுரிந்து வருகின்றனா். இந்நிலையில் இவா்கள் இருவரும் டீக்கடை வீதியில் நண்பா்களுடன் மது அருந்திக் கொண்டிருந்த போது அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் முன்விரோதம் காரணமாக அடையாளம் தெரியாத நபா்கள், இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனா். அருகில் இருந்தவா்கள் அவா்களை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். பின்னா் ராஜபாளையத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவா்கள் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.