விருதுநகா்: புதுதில்லியில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக விருதுநகரில் தொழிற்சங்கங்கள் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகா் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச மாவட்ட தலைவா் மாடசாமி தலைமை வகித்தாா். இதில், மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி புதுதில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கோஷமிடப்பட்டது. இதில், சிஐடியு மாவட்டத் தலைவா் மகாலட்சுமி, ஏஐடியுசி நிா்வாகி சமுத்திரம், சிஐடியு மாவட்டச் செயலா் தேவா ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.