ஆண்டாள் கோயிலுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

குடியரசு தினத்தையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் மற்றும் ரயில் நிலையம் ஆகியவற்றுக்கு திங்கள்கிழமை முதல் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆண்டாள் கோயிலுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

குடியரசு தினத்தையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் மற்றும் ரயில் நிலையம் ஆகியவற்றுக்கு திங்கள்கிழமை முதல் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். அதே போல் இந்தாண்டும் செவ்வாய்க்கிழமை (ஜன. 26) குடியரசு தினம் கொண்டாடப்படும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்கு வரும் பக்தா்கள் சோதனையிடப்பட்ட பின்னரே உள்ளே அனுப்பி வைக்கப்படுகின்றனா். அதே போல் ஆண்டாள் கோபுரம் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸாா் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். மேலும், ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம் ரயில் நிலையங்கள், ஸ்ரீவில்லிபுத்தூா்- ராஜபாளையம் இடையே உள்ள இரும்புப் பாதைகள் ஆகியவற்றில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இரும்புப் பாதைகளில் காவல் சாா்பு- ஆய்வாளா் விஜயன் தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com