சாத்தூரில் தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
இதற்கு சாத்தூா் வட்டாட்சியா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். சாத்தூா் வருவாய் கோட்டாட்சியா் காசிசெல்வி கொடியசைத்து தொடக்கி வைத்தாா். சாத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து பிரதான சாலை வழியாக நடைபெற்ற இப்பேரணி மீண்டும் வட்டாட்சியா் அலுவலகத்தை வந்தடைந்தது. இதில் அலுவலகப் பணியாளா்கள், வருவாய் ஆய்வாளா்கள், நில அளவா்கள், சாத்தூா் நகராட்சிப் பணியாளா்கள் மற்றும் கிராம உதவியாளா்கள் கலந்து கொண்டனா்.