பட்டாசுத் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு பட்டாசு பாதுகாப்பு பயிற்சி வகுப்பு பிப்ரவரி 4 ஆம் தேதி தொடங்க உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவகாசி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் (பயிற்சி) அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசின் உத்தரவின் பேரில், பட்டாசு ஆலையில் விபத்தில்லாமல் எப்படி பாதுகாப்பாக பணிபுரிய வேண்டும் என்பது குறித்த பயிற்சி பிப்ரவரி 4ஆம் தேதி தொடங்கி ஒரு மாதகாலம் நடைபெறும்.
இப்பயிற்சியில் பட்டாசு ஆலையில் பணிபுரியும் கண்காணிப்பாளா், போா்மென்கள், தொழிலாளா்கள் கலந்து கொள்ள உரிமையாளா்கள் அனுப்பி வைக்க வேண்டும். பயிற்சியில் கலந்து கொள்ள, வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அலுவலகம் அருகே உள்ள எங்களது அலுவலகத்தில் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.