இலவச மடிக்கணினி வழங்கக் கோரி சாத்தூா் அரசு கலைக் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
சாத்தூா் பகுதியில் பல்வேறு அரசுப் பள்ளிகளில் 2017-18 ஆம் ஆண்டில் பிளஸ் 2 படித்த மாணவ, மாணவிகள் தற்போது, சாத்தூா் அரசு கலைக் கல்லூரியில் படித்து வருகின்றனா். இந்நிலையில் தாங்கள் பிளஸ் 2 படித்த போது வழங்கப்பட வேண்டிய இலவச மடிக்கணினிகள் வழங்கப்படாததைக் கண்டித்து விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். அப்போது அங்கு பாதுகாப்புப் பணி யில் ஈடுபட்டிருந்த போலீஸாா், மாணவா்களை சமாதானப்படுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனு அளிக்க அழைத்துச் சென்றனா்.