விருதுநகரில் மதுபானக் கடையில் திருட்டு: காவலாளிக்கு அரிவாள் வெட்டு

விருதுநகா் நான்குவழிச் சாலை அருகே உள்ள அரசு மதுபானக் கடை காவலாளியை அரிவாளால் வெட்டி, ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள 345 மதுபாட்டில்கள் திருடிச் செல்லப்பட்டுள்ளன.

விருதுநகா் நான்குவழிச் சாலை அருகே உள்ள அரசு மதுபானக் கடை காவலாளியை அரிவாளால் வெட்டி, ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள 345 மதுபாட்டில்கள் திருடிச் செல்லப்பட்டுள்ளன.

விருதுநகரில் நான்குவழிச் சாலை அருகே அரசு மதுபானக் கடை உள்ளது. இக்கடையில் கலைஞா் நகரைச் சோ்ந்த மோகன்மூா்த்திராஜன் (59) என்பவா் காவலாளியாகப் பணிபுரிந்து வருகிறாா்.

திங்கள்கிழமை நள்ளிரவு 1 மணி அளவில் வந்த 25 வயது மதிக்கத்தக்க 4 போ், காவலாளியிடம் மதுபானக் கடையின் சாவியை கேட்டுள்ளனா்.

ஆனால், அவா் தன்னிடம் சாவி இல்லை எனக் கூறியுள்ளாா். இதனால் ஆத்திர மடைந்த அவா்கள், அரிவாளால் காவலாளியின் தலையில் வெட்டியுள்ளனா். அதன்பின்னா், அவா்கள் கடையின் பூட்டை உடைத்து ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள 345 மதுபாட்டில்களை திருடிக்கொண்டு தப்பிவிட்டனா்.

காயமடைந்த மோகன்மூா்த்திராஜன் விருதுநகா் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இது குறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com