காரியாபட்டி அருகே காரில் மணல் கடத்திய நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மூவா் தப்பி ஓடிவிட்டனா்.
விருதுநகா் மாவட்டம் காரியாபட்டி பகுதியில் நாள்தோறும் ஆற்று மணல் கடத்துவதாக அருப்புக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளா் சகாயஜோய்-க்கு புகாா் வந்துள்ளது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில், காரியாபட்டி சாா்பு- ஆய்வாளா் ஆனந்தஜோதி தலைமையிலான போலீஸாா், காரியாபட்டி சந்திப்பு சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் மூட்டை மூட்டையாக மணல் இருப்பது தெரிந்தது. காரை பறிமுதல் செய்த போலீஸாா், ஓட்டுநா் ராஜாமுகம்மது (31) என்பவரைக் கைது செய்தனள்ா்.
மணல் கடத்தலுக்கு உதவியாக காரின் பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று போ் தப்பி ஓடிவிட்டனா். விசாரணையில் அவா்கள், காரியாபட்டி பகுதியை சோ்ந்த முருகேசன், அசோக், சிவா என்பது தெரியவந்தது. அவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.