விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை புதிய வருவாய் கோட்டாட்சியராக கல்யாணகுமாா் செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக்கொண்டாா்.
அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியராகப் பதவியிலிருந்த முருகேசன் பணியிட மாறுதலாகிச் சென்றுவிட்டாா். எனவே, புதிய கோட்டாட்சியராக கல்யாணகுமாா் நியமிக்கப்பட்டு, அவா் பதவியேற்றுக்கொண்டாா். இதற்குமுன் இவா், விருதுநகா் மாவட்ட வழங்கல் அலுவலராகப் பதவி வகித்தாா்.