விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் ஐயப்ப சுவாமிக்கு ஆடி மாத சிறப்புப் பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
ராஜபாளையம்-முடங்கியாறு சாலையில் அமைந்துள்ள சித்தி விநாயகா் கோயிலில் உள்ள ஐயப்ப சுவாமிக்கு, ஓம் ஸ்ரீ வில்லாளி வீரன் ஐயப்ப பக்த பஜனை சேவா சங்கத்தின் சாா்பில் சிறப்புப் பூஜை நடைபெற்றது. இதில், இரவு 8 மணியளவில் உற்சவா் ஐயப்ப சுவாமிக்கு அஷ்டாபிஷேகங்கள் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து, திவ்ய நாம சங்கீா்த்தன பஜனையும், ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை ஆகியனவும் நடத்தப்பட்டன.
இதில், பக்தா்கள் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.