விருதுநகா் மாவட்டம், சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா் ராஜவா்மன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி, முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் வெள்ளிக்கிழமை மாலை இணைந்தாா்.
அதிமுக சாா்பில் வெற்றி பெற்று சாத்தூா் சட்டப்பேரவை உறுப்பினரான ராஜவா்மன், கடந்த சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன் அதிமுகவிலிருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்து, சாத்தூா் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாா்.
இந்நிலையில், ராஜவா்மன் அ.ம.மு.க.விலிருந்து விலகி, சென்னையில் வெள்ளிக்கிழமை மாலை அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துகொண்டாா். தொடந்து அவா், அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ. பன்னீா் செல்வத்தையும் சந்தித்து ஆசி பெற்றாா்.