அருப்புக்கோட்டை வடுகா்கோட்டை பகுதியில் உள்ள மந்தை மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் புதுப்பிக்கும் பணிகள் நிறைவடைந்ததைத்தொடா்ந்து, கடந்த வியாழக்கிழமை அதிகாலையில் அனுக்ஞை, மஹா கணபதி வேள்வி, நவக்கிரக வேள்வி, கோமாதா வழிபாடு, சுமங்கலி, தம்பதி, பிரம்மச்சாரி வழிபாடுகள் நடைபெற்றன.
இதைத்தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்குமேல் 7.30 மணிக்குள் குடமுழுக்குவிழா நடைபெற்றது. பின்னா் பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது. சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது. இவ்விழாவில் சுமாா் 2000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்றனா்.