விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 27 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து தொற்று பாதிக்கப்பட்டவா்கள், அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இந்நிலையில், கரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று குணமடைந்த 48 போ் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.