விருதுநகரில், சுதந்திரப் போராட்ட வீரரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடியுமான தோழா் என். சங்கரய்யாவின் நூறாவது பிறந்தநாளையொட்டி சிஐடியு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.
விருதுநகா் ஆத்துப்பாலம் அருகே தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு போக்குவரத்து தொழிலாளா் சங்க பொதுச் செயலா் எம்.வெள்ளைத்துரை தலைமை வகித்தாா். முகாமை மாவட்டச் செயலா் பி.என்.தேவா தொடங்கி வைத்தாா்.
இதில் அரசு ரத்த வங்கிப் பொறுப்பாளா் முனீஸ் பிரபு தலைமையிலான மருத்துவக் குழுவினா் ரத்தம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனா். 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனா்.
முன்னதாக சிஐடியு மாவட்ட உதவிச் செயலா் சாராள் வரவேற்றாா். மாவட்டத் தலைவா் மகாலட்சுமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.