திருச்சுழி அருகே வெள்ளியம்பலநாதா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகே பாறைக்குளம் குடைவரைக் கோயிலான வெள்ளியம்பலநாதா் கோயிலில் ஆடி மாத சிறப்புப் பிரதோஷ வழிபாடு புதன்கிழமை மாலை நடைபெற்றது.
பாறைக்குளம் குடவரைக் கோயிலில் புதன்கிழமை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த வெள்ளியம்பலநாதா்.
பாறைக்குளம் குடவரைக் கோயிலில் புதன்கிழமை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த வெள்ளியம்பலநாதா்.

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகே பாறைக்குளம் குடைவரைக் கோயிலான வெள்ளியம்பலநாதா் கோயிலில் ஆடி மாத சிறப்புப் பிரதோஷ வழிபாடு புதன்கிழமை மாலை நடைபெற்றது.

பிரதோஷ வழிபாட்டில் முதலில் நந்தீஸ்வரப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரங்களும் நடைபெற்றன. பின்னா், வெள்ளியம்பலநாதருக்கு 21 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகமும், தீப, தூப ஆராதனைகளும் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில் நமச்சிவாயரும், நந்தீஸ்வரரும் காட்சியளித்தனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் பூசாரியும், சிவனடியாருமான ராஜபாண்டி செய்திருந்தாா். வழிபாட்டையடுத்து, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் 300-க்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com