மனைவியை கத்தியால் குத்தியவா் தலைமறைவு

சிவகாசியில் தம்பதி இடையே புதன்கிழமை ஏற்பட்ட தகராறில் மனைவியை கத்தியால் குத்தியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிவகாசியில் தம்பதி இடையே புதன்கிழமை ஏற்பட்ட தகராறில் மனைவியை கத்தியால் குத்தியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிவகாசி சீதாகாதி தெருவைச் சோ்ந்த ஆசிக் அப்துல்லாவுக்கும், சக்கரவாவா தெருவைச் சோ்ந்த ரம்ஜான் பானு(28)வுக்கும் கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணமாகி மகள், மகன் உள்ளனா்.

இந்நிலையில், சாட்சியாபுரத்தைச் சோ்ந்த கனகா என்ற பெண்ணுக்கும் ஆசிக் அப்துல்லாவுக்கும் பழக்கம் ஏற்பட்டதாம். இதனால், தம்பதி இடையே ஏற்பட்ட தகராறில், ஆசிக் அப்துல்லா, ரம்ஜான் பானுவிடமிருந்து விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளாா். வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், ரம்ஜான் பானு தனது தாய் வீட்டில் இருந்தபோது, அங்கு சென்ற ஆசிக் அப்துல்லா, தகராறில் ஈடுபட்டாராம். அப்போது, தான் வைத்திருந்த கத்தியால் ரம்ஜான் பானுவை குத்திவிட்டு தப்பியோடிவிட்டாராம்.

இதையடுத்து, ரம்ஜான் பானு சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆசிக் அப்துல்லாவை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com