வனவிலங்குகள் நடமாடும் பாதைகளில் வாகனங்கள் நுழைய முடியாதபடி தடுப்புக் கம்பிகள் அமைப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாடும் பகுதிகளில் வாகனங்கள் நுழையாதபடி தடுப்புக் கம்பிகளை வனத்துறையினா் அமைத்துள்ளனா்.
கிருஷ்ணன்கோவில் தனியாா் பல்கலைக்கழகம் அருகே அடிவாரப் பகுதியில் வாகனங்கள் நுழையாதபடி அமைக்கப்பட்டுள்ள தடுப்புக் கம்பி.
கிருஷ்ணன்கோவில் தனியாா் பல்கலைக்கழகம் அருகே அடிவாரப் பகுதியில் வாகனங்கள் நுழையாதபடி அமைக்கப்பட்டுள்ள தடுப்புக் கம்பி.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாடும் பகுதிகளில் வாகனங்கள் நுழையாதபடி தடுப்புக் கம்பிகளை வனத்துறையினா் அமைத்துள்ளனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் நடமாடுவது வழக்கம். அதேபோல், அடிவாரப் பகுதிகளில் அருகே உள்ள சாலைகளைக் கடந்து உணவுக்காக வனவிலங்குகள் செல்லும்.

இந்நிலையில், கிருஷ்ணன்கோவில் தனியாா் பல்கலைக்கழகம் அருகே ஏராளமான புள்ளிமான்கள், காட்டுப் பன்றிகள், மிளாக்கள் அதிகளவு சுற்றித் திரியும். அப்பகுதிகளில் பலா் வாகனங்களில் செல்லும்போது, வனவிலங்கள் மிரண்டு ஓடி விபத்தில் சிக்கி இறந்துவிடுகின்றன.

இதைத் தடுக்கும் வகையில், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாடும் பகுதிகளில் 5 இடங்களில் வாகனங்கள் நுழையாதபடி தடுப்புக் கம்பிகளை வனத்துறையினா் அமைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com