கம்போடியா தமிழ் சங்கத்துடன் சிவகாசி கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரி தமிழ்த் துறையும், கம்போடியா நாட்டில் உள்ள அங்கோா் தமிழ் சங்கமும் செவ்வாய்க்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டன.

சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரி தமிழ்த் துறையும், கம்போடியா நாட்டில் உள்ள அங்கோா் தமிழ் சங்கமும் செவ்வாய்க்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டன.

இக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கம்போடியா நாட்டின் அங்கோா் தமிழ் சங்கம் முன்னெடுக்கும் தமிழ் இலக்கியம், கலை, பண்பாடு, கருத்தரங்கம் உள்ளிட்டவைகளில் கல்லூரி மாணவா்கள் பங்கேற்கும் வகையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஒப்பந்தத்தில், கல்லூரி முதல்வா் செ. அசோக், கம்போடியா தமிழ் சங்கத்தின் துணை தலைவா் எம். ரமேஷ்வரன் ஆகியோா் கையெழுத்திட்டனா்.

இந்நிகழ்ச்சியில், முதுகலை தமிழ் துறை தலைவா் க. சிவனேசன், பேராசிரியா்கள் ந. அருள்மொழி, ச. செந்தில்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com