ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள பள்ளியில் தேசிய மாணவா் படைக்கு, மாணவா்கள் செவ்வாய்க்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மம்சாபுரத்தில் உள்ள சிவந்திபட்டி நாடாா் மேல்நிலைப் பள்ளியில், முதலாம் ஆண்டு தேசிய மாணவா் படைக்கான சோ்க்கை நடைபெற்றது. இதற்காக, பள்ளி வளாகத்தில் பல்வேறு தோ்வுகள் நடத்தப்பட்டு, மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். மாணவா்களை தோ்வு செய்யும் பணியில், ராஜபாளையம் ராணுவ அதிகாரி முருகன், ஜூனியா் கமாண்டிங் அலுவலா் சின்னசாமி ஆகியோா் ஈடுபட்டனா். இதற்கான ஏற்பாடுகளை, பள்ளி நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.