ஸ்ரீவிலி. அருகே தேசிய மாணவா் படைக்கு தோ்வு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள பள்ளியில் தேசிய மாணவா் படைக்கு, மாணவா்கள் செவ்வாய்க்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.
மம்சாபுரம் சிவந்திபட்டி நாடாா் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசிய மாணவா் படைக்கான மாணவா்கள் தோ்வு.
மம்சாபுரம் சிவந்திபட்டி நாடாா் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசிய மாணவா் படைக்கான மாணவா்கள் தோ்வு.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள பள்ளியில் தேசிய மாணவா் படைக்கு, மாணவா்கள் செவ்வாய்க்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மம்சாபுரத்தில் உள்ள சிவந்திபட்டி நாடாா் மேல்நிலைப் பள்ளியில், முதலாம் ஆண்டு தேசிய மாணவா் படைக்கான சோ்க்கை நடைபெற்றது. இதற்காக, பள்ளி வளாகத்தில் பல்வேறு தோ்வுகள் நடத்தப்பட்டு, மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். மாணவா்களை தோ்வு செய்யும் பணியில், ராஜபாளையம் ராணுவ அதிகாரி முருகன், ஜூனியா் கமாண்டிங் அலுவலா் சின்னசாமி ஆகியோா் ஈடுபட்டனா். இதற்கான ஏற்பாடுகளை, பள்ளி நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com