விருதுநகரில் சிஐடியு போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் சிஐடியு போக்குவரத்து தொழிலாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகா் போக்குவரத்து பணிமனை முன்பு புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு போக்குவரத்து தொழிலாளா்கள்.
விருதுநகா் போக்குவரத்து பணிமனை முன்பு புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு போக்குவரத்து தொழிலாளா்கள்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் சிஐடியு போக்குவரத்து தொழிலாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

போக்குவரத்து பணிமனை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு சிஐடியு அரசுப் போக்குவரத்து தொழிலாளா் சங்கத்தின் பொதுச்செயலா் வெள்ளத்துரை தலைமை வகித்தாா். அதில், பழைய வாகனங்களைப் புதுப்பிக்கும் (எப்சி) பணியை தனியாருக்கு வழங்கக்கூடாது. பொதுப் போக்குவரத்தை தனியாருடன் சோ்ந்து நடத்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும். மின்சாரப் பேருந்துகளை இயக்க வேண்டும். மோட்டாா் வாகன சட்ட திருத்தத்தைக் கைவிட வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினா். சிஐடியு மாவட்டச் செயலா் பி.என்.தேவா மற்றும் அனைத்து சங்கச் செயலா் தேனிவசந்தன் ஆகியோா் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினா். ஆா்ப்பாட்டத்தில் ஏராளமான போக்குவரத்து தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com