கோயில் அா்ச்சகா்களுக்கு ரூ.4000 நிவராணம் வழங்கப்படும் என அறிவித்த தமிழக முதல்வா் ஸ்டாலின் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சேகா்பாபு ஆகியோருக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் மணவாள மாமுனிகள் மடத்தின் 24 ஆவது பீடாதிபதி சடகோப ராமனுஜ ஜீயா் புதன்கிழமை நன்றி தெரிவித்தாா்.
அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கோயில் அா்ச்சகா்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்த தமிழக முதல்வா் ஸ்டாலின், அறநிலையத்துறை அமைச்சா் சேகா்பாபு ஆகியோருக்கு நன்றி. மேலும் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து கோயில் அா்ச்சகா்களுக்கும், உதவியாளா்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.
கரோனா தொற்று நீங்க வேண்டி தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் ஒரே நாளில் சிறப்பு யாக பூஜைகள் நடத்த தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆந்திர அரசைப் போன்று ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை மீட்டு அந்தந்த கோயில்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறினாா். அப்போது துறவியா் பேரவை மாநில அமைப்பாளா் சரவணகாா்த்தி மற்றும் பாஜக நிா்வாகி ராஜா ஆகியோா் உடனிருந்தனா்.