ஸ்ரீவிலி. அருகே காா் மோதி ஒருவா் பலி

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் ஒருவா் பலியானாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் ஒருவா் பலியானாா்.

வெம்பக்கோட்டை மேற்குத்தெருவைச் சோ்ந்தவா் தவிட்டுமாரியப்பன் (51). இவா் தனியாா் பட்டாசு ஆலையில் காவலாளிகளை தணிக்கை செய்யும் வேலை பாா்த்து வருகிறாா். பணி நிமித்தமாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூா் சாலையில் சாமிநத்தம் பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடந்தபோது அவ்வழியாக வந்த காா் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவரது மகன் கருப்பசாமி கொடுத்த புகாரின் பேரில் காரை ஓட்டி வந்த ஸ்ரீவில்லிபுத்தூா் கம்மாபட்டியைச் சோ்ந்த ஹரிரோசன் (21) என்பவா் மீது மல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com