விருதுநகா் மாவட்ட புதிய எஸ்.பி. பொறுப்பேற்பு

விருதுநகா் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக எம். மனோகா் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
விருதுநகா் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக திங்கள்கிழமை பதவி ஏற்றுக் கொண்ட எம். மனோகா்.
விருதுநகா் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக திங்கள்கிழமை பதவி ஏற்றுக் கொண்ட எம். மனோகா்.

விருதுநகா் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக எம். மனோகா் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணி புரிந்த பி. பெருமாள் காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளாா். இந்நிலையில், தமிழக அரசு சாா்பில் விருதுநகா் மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய காவல் கண்காணிப்பாளா் எம். மனோகா் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இவா், சேலம் அரசுக் கல்லூரியில் பிஎஸ்சி பட்டப்படிப்பையும், சென்னை மாநிலக் கல்லூரியில் எம்எஸ்சி பட்டப்படிப்பையும் முடித்துள்ளாா். மேலும் ஆா்கானிக் வேதியியலில் முனைவா் பட்டத்துக்கு ஆய்வு மேற்கொண்ட போது, குரூப் 1 தோ்வில் வெற்றி பெற்றாா். இதையடுத்து, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் துணைக் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினாா். பின்னா், மதுரை மாவட்டம் மேலூரில் துணைக் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய இவா், கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பதவி உயா்வு பெற்று மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் மதுவிலக்கு பிரிவில் பணி புரிந்துள்ளாா். அதைத் தொடா்ந்து சென்னை போக்குவரத்து துணை ஆணையராகவும், பஜாா் துணை ஆணையராகவும் இருந்துள்ளாா். அதே போல், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும், கிருஷ்ணகிரி அதிரடிப்படை கண்காணிப்பாளராகவும், சென்னை கடலோரக் காவல் படை மாவட்ட கண்காணிப்பாளராகவும், உளுந்தூா்பேட்டை சிறப்பு காவல்படை கமாண்டராகவும், சென்னை கீழ்பாக்கம் துணை ஆணையராகவும், சென்னை காவல் நலத்துறை கண்காணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com