விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 389 பேருக்கு கரோனா: 7 போ் பலி

விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 389 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சை பலனின்றி 7 போ் உயிரிழந்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 389 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சை பலனின்றி 7 போ் உயிரிழந்துள்ளனா்.

இம்மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் விருதுநகா், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, சாத்தூா், சிவகாசி, திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், வத்திராயிருப்பு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 389 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட அனைவரும் விருதுநகா், அருப்புக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம் ஆகிய இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இந்நிலையில் 7 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். அதே நேரம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த 654 போ் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com