ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையம், பெரிய கடை பஜாா், நகைக்கடை பஜாா், பென்னிங்டன் மாா்க்கெட் பகுதி, சின்னக்கடை பஜாா் ஆகிய பகுதிகளில் வட்டாட்சியா் சரவணன், வருவாய் ஆய்வாளா் ஆனந்தகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் சோதனை செய்தனா். அப்போது பொதுமுடக்க விதிகளை மீறி திறக்கப்பட்டிருந்த 10 கடைகளின் சாவிகளை பறிமுதல் செய்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.