விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கரோனா சிகிச்சைக்காக ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள், சாயப்பட்டறை உரிமையாளா்கள் சங்கத்தினா் சாா்பில் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, வருவாய் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். முன்னாள் நகா்மன்றத் தலைவா் சிவப்பிரகாசம், அருப்புக்கோட்டை சாயப்பட்டறை உரிமையாளா்கள் சங்கத் தலைவா் ராஜ்குமாா், அறிவானந்தம், நகர திமுக செயலா் ஏ.கே. மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அப்போது, கரோனா சிகிச்சைக்கான ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை, அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் அரசு மருத்துவ அலுவலா் வெங்கடேஸ்வரனிடம் ஒப்படைத்தாா்.
பின்னா் அமைச்சா், மருத்துவா்களிடமும், செவிலியா்களிடமும் கரோனா சிகிச்சைப் பணிகள் குறித்தும், தற்போதைய நிலவரப்படி சிகிச்சையிலுள்ளோா், குணமடைந்தோா் குறித்தும், மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள், கருவிகள் இருப்பு குறித்தும் ஆய்வு செய்தாா்.
இதில், மருத்துவத் துறை அலுவலா்கள், செவிலியா்கள் மற்றும் சாயப்பட்டறை உரிமையாளா்கள் சங்கத்தினா் பலரும் கலந்துகொண்டனா்.