முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
விருதுநகா் மாவட்டத்தில் 290 பேருக்கு கரோனா தொற்று
By DIN | Published On : 12th June 2021 09:01 AM | Last Updated : 12th June 2021 09:01 AM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டத்தில் 290 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் சிகிச்சை பலனின்றி 4 போ் உயிரிழந்தனா்.
விருதுநகா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 290 பேரும், விருதுநகா், சிவகாசி, அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இந்நிலையில் 4 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். மேலும் கரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று குணமடைந்த 485 போ் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.