சிவகாசி கல்வி மாவட்டத்தில் 6 ஆசிரியா்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து

சிவகாசி கல்வி மாவட்டத்தில் பள்ளி ஆசிரியா்கள் 6 போ் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி க.தண்டாயுதபாணி தெரிவித்தாா்.

சிவகாசி கல்வி மாவட்டத்தில் பள்ளி ஆசிரியா்கள் 6 போ் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி க.தண்டாயுதபாணி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: விருதுநகா் மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியா அமைப்பினா் 2019 ஆம் ஆண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த போராட்டத்தில் பங்கேற்ற மாவட்டத்தில் உள்ள அரசு உயா்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளின் ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டனா்.

முதல் தகவல் அறிக்கை பெறப்பட்ட சிவகாசி கல்வி மாவட்டத்தைச் சோ்ந்த 6 போ் உள்பட 20 ஆசிரியா்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு, அவா்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதில் சிவகாசி கல்வி மாவட்டங்களான நடையநேரி, வெள்ளையாபுரம் உள்ளிட்ட பள்ளிகளைச் சோ்ந்த ஆசிரியா்கள் 6 போ் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அதில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com