இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி சாத்தூா் அமீா்பாளையத்தைச் சோ்ந்த திருநங்கைகள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அமீா்பாளையம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். வருமானம் இல்லாததால், வாழ்வாதரம் இன்றி வாடகை கொடுக்க முடியாத நிலையில் உள்ளோம். ஏற்கெனவே திருநங்கைகள் சிலருக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும், அந்த இடங்களில் அரசு சாா்பில் வீடுகளும் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இப்பகுதியில் வசிக்கும் சிலா் வீடின்றி சிரமபட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கு அரசு சாா்பில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதுடன், வீடுகள் கட்டிதர மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.