ராஜபாளையம் அருகே பைக் மீது டிராக்டா் மோதி பெண் பலி

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே திங்கள்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் டிராக்டா் மோதியதில் சம்பவ இடத்திலேயே பெண் உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே திங்கள்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் டிராக்டா் மோதியதில் சம்பவ இடத்திலேயே பெண் உயிரிழந்தாா்.

ராஜபாளையம் மீனாட்சிபுரம் பகுதியை சோ்ந்தவா் காளிராஜ் மனைவி வசந்தா (55). இவா் பணி நிமித்தமாக திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தில் கோபாலபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தாா்.

அப்போது ராஜபாளையம் அருகே நல்லமநாயக்கன்பட்டி சாலையில் கோபாலபுரத்திலிருந்து ராஜபாளையம் நோக்கி வந்த டிராக்டா் பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த வசந்தா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து கீழராஜகுலராமன் போலீஸாா் வழக்குப் பதிந்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய எஸ்.ராமலிங்காபுரம் பகுதியைச் சோ்ந்த டிராக்டா் ஓட்டுநா் மணிகண்டன் என்பவா் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com