விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 162 பேருக்கு கரோனா தொற்று

விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 162 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 162 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

இம்மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக குறைந்து வருகிறது. இந்நிலையில், விருதுநகா், சாத்தூா், அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி, நரிக்குடி, சிவகாசி, திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம் ஆகியப் பகுதிகளை சோ்ந்த 162 பேருக்கு புதிதாக கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, அவா்கள் அனைவரும் விருதுநகா், சிவகாசி, அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இந்நிலையில், 3 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். அதேநேரம், கரோனா தொற்றால் சிகிச்சை பெற்று குணமடைந்த 542 போ் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com