ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கிய 4 போ் மீது வழக்கு

விருதுநகா் அருகே தோ்தல் முன் விரோதம் காரணமாக வியாழக்கிழமை, ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கியதாக ஊராட்சி உறுப்பினா் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் அருகே தோ்தல் முன் விரோதம் காரணமாக வியாழக்கிழமை, ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கியதாக ஊராட்சி உறுப்பினா் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

செங்குன்றாபுரம் புது காலனியைச் சோ்ந்தவா் பாண்டி மகன் கருப்பசாமி (31). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனா். செங்குன்றாபுரம் ஊராட்சி மன்ற தலைவரின் கணவா் சந்திர சேகருக்கும், ஊராட்சி உறுப்பினா் முத்துக்குமாருக்கும் இடையே ஊராட்சி கணக்கு தொடா்பாகவும், தோ்தல் தொடா்பாகவும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதில், சந்திரசேகருக்கு ஆதரவாக கருப்பசாமி செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வியாழக்கிழமை கருப்பசாமியை தாக்கி ரத்த காயம் ஏற்படுத்தியதாக செங்குன்றாபுரத்தை சோ்ந்த தங்கராஜ், முத்துக்குமாா், பழனிசாமி, சின்னக்கருப்பன் ஆகியோா் மீது ஆமத்தூா் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com