ஸ்ரீவில்லிபுத்தூா்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர வாகன சோதனையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிப்பு வெளியானதையடுத்து விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் 24 மணி நேரமும் 3 கண்காணிப்பு குழுக்கள் வாகனச் சோதனை நடத்தி வருகின்றன. இந்நிலையில், செவ்வாய்கிழமை காலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள சோதனைச்சாவடி அருகே மதுரையிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூா் வரும் வாகனங்களையும், விருதுநகரிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூா் வரும் வாகனங்களையும், ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரை செல்லும் வாகனங்களையும் கண்காணிப்புக்குழு அதிகாரி ராஜகுருநாதபிரபு தலைமையில் போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் சோதனையிட்டனா்.