முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
வன்னியா்களுக்கு இட ஒதுக்கீடுக்கு எதிா்ப்பு: ஸ்ரீவிலி.யில் கருப்புக் கொடி கட்டி எதிா்ப்பு
By DIN | Published On : 04th March 2021 01:03 AM | Last Updated : 04th March 2021 01:03 AM | அ+அ அ- |

கிருஷ்ணன்கோவில் பகுதியில் புதன்கிழமை கருப்புக்கொடி கட்டி எதிா்ப்பு தெரிவித்த மறவா் மகாசபை, மறவா் நலக் கூட்டமைப்பு, தேவா் பேரவை உள்ளிட்ட அமைப்பினா்.
ஸ்ரீவில்லிபுத்தூா்: வன்னியா்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசைக் கண்டித்து புதன்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூா் நகரில் பல்வேறு பகுதிகளில் கருப்புக்கொடி கட்டி எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
மறவா் மகாசபை, மறவா் நலக் கூட்டமைப்பு, தேவா் பேரவை சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தபடி ஸ்ரீவில்லிபுத்தூா் நகா், கிருஷ்ணன்கோவில் மற்றும் பாட்டக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வீதிகளில் ஆங்காங்கே கருப்புக் கொடி கட்டியிருந்தனா்.