பட்டாசு ஆலைகளை மீண்டும் திறக்க வலியுறுத்தி சிவகாசியில் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளை மீண்டும் திறக்க வலியுறுத்தி சிவகாசியில் மாவட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டி
சிவகாசி புதுதெருவில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.
சிவகாசி புதுதெருவில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.

விருதுநகா் மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளை மீண்டும் திறக்க வலியுறுத்தி சிவகாசியில் மாவட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளா் சங்கம் (சி.ஐ.டி.யு) சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகாசி புதுதெருப் பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் விருதுநகா் மாவட்டத் தலைவா் மகாலட்சுமி தலைமை வகித்தாா். சிவகாசி - நாரணாபுரம் சாலை முருகன் காலனிப் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு அச்சங்கத்தின் விருதுநகா் மாவட்ட செயலாளா் பி.என்.தேவா தலைமை வகித்தாா்.

இதில் தொழிலாளா்கள் நலன் கருதி விருதுநகா் மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளைத் திறக்க வேண்டும். வருவாய்த் துறை மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினா் பட்டாசு ஆலைகளில் முறையாக ஆய்வு செய்து விதிமீறலை சீரமைக்க வேண்டும். பட்டாசுத் தொழிலையும், தொழிலாளா்களையும் மத்திய மாநில அரசுகள் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.

இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com